நரிக்குறவர்களை பழங்குடியினராக அறிவிக்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:நரிக்குறவர் சமுதாயத்தை தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட பழங்குடியின நரிக்குறவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நரிக்குறவர் சமுதாயத்தினர் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் திட்டங்களான 2 ஏக்கர் இலவச நிலம், இலவச கலர் டிவி, இலவச வீட்டு மனைப் பட்டா ஆகிய திட்டங்களில் நரிக்குறவர் சமுதாயத்தினரையும் பயனாளிகளாக சேர்க்க வேண்டும்.
நரிக்குறவர் சமுதாயத்தை தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசைக் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications