லாரி ஸ்டிரைக்-ஈரோட்டில் 10 கோடி பொருள் தேக்கம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:கேரளாவில் நடந்து வரும் லாரி ஸ்டிரைக்கால், கேரளாவுக்கு லாரிகள் செல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 கோடி பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.
லாரிகளில் வேக கட்டுபாடு கருவி அமைக்க வேண்டும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக லாரி உரிமையாளர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரள அரசு தனது உத்தரவை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் ஈரோட்டிலிருந்து கேரளாவிற்கு செல்லும் லாரிகள் இன்று 4வது நாளாக ஓடாததால் ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. சுமார் 2,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications