கார்களைக் கொளுத்திய மர்ம நபர் சிக்கினார்
சென்னை:சென்னை நகரில் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தி நகரையே பரபரப்பில் ஆழ்த்தியவர் குப்பை பொறுக்கும் இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை நகரில் அசோக் நகர், கே.கே.நகர், விருகம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஆகியவை மர்மமான முறையில் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. யார் இந்த செயலில் ஈடுபடுவது என்று தெரியாமல் போலீஸார் குழம்பி வந்தனர். மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
![]() |
இந்த நிலையில், லிங்கேஸ்வர் நகர் என்ற பகுதியில், ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்ததை தனிப்படை போலீஸார் பார்த்து அவரை அணுகி விசாரித்தனர்.
போலீஸாரிடம் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரைக் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று விசாரித்ததில் அவர்தான் வாகனங்களைக் கொளுத்திய ஆசாமி என்பது தெரிய வந்தது.
அவரது பெயர் சையத் இப்ராகிம் (33). தெருக்களில் குப்பை பொறுக்கி பிழைத்து வருபவர். கடந்த 3 மாதங்களாக இப்படி வாகனங்களைக் கொளுத்தும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள்
இப்ராகிமின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகும். அவரது பெற்றோர் தற்போது பட்டுக்கோட்டையில் வசிக்கின்றனர். தந்தை பெயர் அப்துல் மஜீத், தாயார் பெயர் சுபேதா.
15 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளார் இப்ராகிம். பழைய பேப்பர், இரும்புப் பொருட்களை சேகரித்து விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார்.
வடபழனி சிவன் கோவில் பிளாட்பாரம்தான் இவரது இருப்பிடமாக இருந்து வந்தது. பேப்பர் பொறுக்குவதில் போதிய வருமானம் கிடைக்காததால் அவ்வப்போது சிறு சிறு திருட்டிலும் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக 6 முறை கைதாகி சிறைக்கும் சென்றுள்ளார்.
இப்ராகிமுக்கு சமையல் வேலையும் தெரியுமாம். சமையல்காரராக வேலை பார்க்கலாம் என முடிவு செய்து அந்த வேலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியுற்றுத்தான் இப்படி வாகனங்களைக் கொளுத்தத் தொடங்கினாராம்.
திருடப் போகும் இடத்தில் பொருட்கள் இல்லாவிட்டால் அங்கு கொடியில் காயும் துணிகளை எரித்து விடுவாராம். இல்லாவிட்டால் கார் சீட்களை கத்தியால் குத்திக் குதறி விட்டுப் போவாராம். சில நேரங்களில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டுப் போவாராம்.
இப்ராகிமுக்கு லேசான மன நல பாதிப்பும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரே போலீஸாரிடம் கூறியுள்ளார். அவருக்கு 18 வயது இருக்கும்போது, தனது பெரியப்பாவின் மகனும், மகளும் முறை கெட்ட உறவில் ஈடுபட்டுள்ளனர். அதை இப்ராகிம் பார்த்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பெரியப்பாவிடம் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக பெரியப்பா குடும்பத்துக்கும், இப்ராகிம் குடும்பத்துக்கும் சண்டை வந்துள்ளது. இதில் கோபமடைந்த இப்ராகிமின் தந்தை மகனை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். அந்த கோபத்தில்தான் அவர் சென்னைக்கு வந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அவருக்கு லேசான மன நல பாதிப்பு ஏற்பட்டதாம்.
கைது செய்யப்பட்ட இப்ராகிமை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?













Click it and Unblock the Notifications