3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையின் வட மத்திய மாவட்டத்தில் 3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வட மத்திய மாவட்டத்தில் உள்ள பொலனருவா என்ற இடத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 சிங்கள விவசாயிகள் இன்று காலை அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜெயந்த விக்ரமரத்னே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் திடீரென அங்கு வந்து வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 விவசாயிகளையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டனர் என்றார்.
இருப்பினும் இதுகுறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications