லாட்டரிக்கான தடை நீடிக்கும்: ஆற்காடு
சென்னை:தமிழகத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று வணிக வரித்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் சிலர், தமிழகத்தில் மீண்டும் லாட்டரிச் சீட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா என்று கேட்டனர்.
அப்போது விவாதத்தில் குறுக்கிட்ட அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழகத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
தடையை மீறி வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் தடையை மீறி லாட்டரிச் சீட்டுக்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications