விஜயகாந்த் மண்டபம்: 30ம் தேதிக்குள் காலி செய்தால்இடிப்புக்கு கால அவகாசம்-உயர்நீதிமன்றம்
சென்னை:ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை வருகிற 30ம் தேதிக்குள் அமைதியான முறையில் அரசிடம் வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்தால், மண்டபத்தை இடிக்க கால அவகாசம் தரப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் பிரேமலதா விஜயகாந்த்துக்கு தெரிவித்துள்ளது.
கல்யாண மண்டபத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் புக் ஆகியுள்ளதால் அதுவரை மண்டபத்தை இடிக்க்க கூடாது என்று கோரி விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரேலதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகஸ்ட் 31ம் தேதி வரை கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மண்டபம் புக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதுவரை மண்டபத்தை ஒப்படைக்க கால அவகாசம் தர வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதற்கெல்லாம் கால அவகாசம் தர முடியாது என்றனர். பின்னர் பேசிய பிரேமலதா வக்கீல், மண்டபத்தில் விலை உயர்ந்த பர்னிச்சர்கள், பொருட்கள் உள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல குறைந்தது ஒரு மாதமாவது தேவைப்படும். அந்த அனுமதியையயாவது கொடுங்கள் என்று கோரினார்.
அதற்கு நீதிபதிகள், ஏப்ரல் 30ம் தேதிக்குள் மண்டபத்தை அமைதியான முறையில், அரசிடம் ஒப்படைப்பேன் என்று பிரேமலதா விஜயகாந்த் உத்தரவாதம் வழங்க வேண்டும். அப்படி வழங்குவதாக இருந்தால் கால அவகாசம் கொடுத்து உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
திங்கள்கிழமைக்குள் இந்த உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications