சேப்பல், மேலாளர் அறிக்கைகள் சொல்வது என்ன?
Subscribe to Oneindia Tamil
மும்பைஉலகக் கோப்பைப் போட்டி குறித்து சேப்பல், அணி மேலாளர் ஜக்தலே ஆகியோர் வாரியத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் சேப்பல் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுவது;
- மூத்த வீரர்கள், இளம் வீரர்களை ஒதுக்குகின்றனர், புறக்கணிக்கின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது போல நடந்து கொள்கின்றனர்.
- டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வதா அல்லது பவுலிங் செய்வதா என்பதை முடிவு செயவது முதல், பேட்டிங் வரிசை உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளிலும் மூத்த வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
- வர்த்தகமும் மூத்த வீரர்களின் விளையாட்டுத் திறமை கடுமையாக பாதித்துள்ளது. வீரர்கள் தேர்வு முதல் அவர்கள் விளையாடுவது வரை விளம்பரதாரர்களின் ஆதிக்கம் கடுமையாக உள்ளது. களத்தில் விளையாடும் 11 வீரர்களையும் சில நேரங்களில் ஸ்பான்சர்கள் கட்டுப்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
- வீரர்களின் உடல் தகுதியை முக்கியமா கருத்தில் கொள்ள வேண்டும். இனிமேல் உடல் ரீதியாக தகுதி உள்ளவர்களை மட்டுமே அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும். உடல் ரீதியாக தகுதியில் இல்லாத வீரர்களுக்கு இடமே கொடுக்கக் கூடாது.
- மூத்த வீரர்கள் பலர் உடற்பயிற்சிக்கு முறையாக வருவதில்லை. வலியப் போய்க் கூப்பிட்டாலும் கூட அலட்சியமாகவே நடந்து கொள்கின்றனர்.
- எதிர்காலத்தை மனதில் கொண்டு அணியில் அதிக அளவில் இளம் வீர்ரகளை போட வேண்டும். அதிலும் உடல் தகுதியுடன் கூடிய இளம் வீரர்களை அதிக அளவில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாராம் சேப்பல்.
ஜக்தலே தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதற்கு நேர் மாறாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜக்தலே கூறியுள்ளதாக கூறப்படுவதுவதாது
- மேற்கு இந்தியத் தீவுகளின் சூழ்நிலைக்கு நமது வீரர்கள் முழு அளவில் தயாராக இல்லை.
- வங்கதேச போட்டியின்போது பேட்டிங் செய்வது குறித்து எடுக்கப்பட்ட முடிவு, அணியின் ஒட்டுமொத்த முடிவுதான்.
- அணியில் மூத்த வீரர்கள், இளம் வீரரக்ள் என பிரிவுகள் எதுவும் இல்லை.
- மூத்த வீரர்கள், இளம் வீரர்களை புறக்கணிப்பதாகவோ அல்லது ஒதுக்குவதாகவோ கூற முடியாது.
- பேட்டிங் சரிவால்தான் இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து சீக்கிரமே வெளியேற நேரிட்டது என்று கூறியுள்ளாராம் ஜக்தலே.












Click it and Unblock the Notifications