Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயுதக் கடத்தல்: மேலும் இருவருக்கு தே.பா.ச.

Subscribe to Oneindia Tamil

சென்னை:இலங்கைக்கு இரும்பு குண்டுகளைக் கடத்த முயன்ற வழக்கில் கைதான மேலும் 2 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு இரும்புக் குண்டுகளைக் கடத்த முயன்றதாக சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலர் பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இதுவரை 15 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேலும் 2 பேரை கியூ பிரிவு போலீஸார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராஜு, சிவகங்கையைச் சேர்ந்த ராவணன் ஆகியோர் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இவர்கள் இருவரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவுகளை இருவரிடமும் போலீஸார் காட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கினர்.

இவர்களையும் சேர்த்து தற்போது இந்த வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+