விழுப்புரத்தில் பயங்கரம்: கார் வெடித்து 20 பேர் பலி10 வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம்
விழுப்புரம்:விழுப்புரம் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் வந்த கார் வெடித்ததில், 20 பேர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது.
இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை சூழ்நது கொண்டு தண்ணீர் ஊற்றி புகையை அணைக்க முயன்றனர்.
அப்போது பயங்கர சப்தத்துடன் அந்தக் கார் வெடித்துச் சிதறியது. இதில் காரை சூழ்ந்து நின்ற பொதுமக்களில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அந்த பகுதி முழுவதும் சிதறிய உடல்களாக காட்சி அளிக்கிறது.
இந்த பயங்கர சம்பவம் காரணமாக அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மர்மமான முறையில் வெடித்த காரில் 4 பெட்டிகள் நிறைய ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 100 ஜெலட்டின் குச்சிகள் இருந்துள்ளன.
அவற்றைக் கொண்டு வந்தவர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி வன்னியபெருமாள் கூறுகையில், வெடித்து சிதறிய காரில் மொத்தம் 2 பேர் இருந்துள்ளனர்.
பாபு, சண்முகம் ஆகிய அந்த இருவரும், புதுச்சேரி, மணலிப்பேட்டை என்ற இடத்தில் உள்ள ஜெலட்டின் குச்சிகளை விற்கும் அங்கீகாரம் பெற்ற சேகர் என்பவரிடமிருந்து ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளனர்.
கல் குவாரிக்காக வாங்குவதாக அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகே உள்ள தேனாலப்பாக்கம் என்ற இடத்தில் சேகர் ஜெலட்டின் குச்சிகளுக்கான கொடவுனை வைத்துள்ளார்.
அங்கு போய் ஜெலட்டின் குச்சிகளை வாங்கிக் கொண்டு தேனாலப்பாக்கத்திலிருந்து கிளம்பி 3 பேரும் வந்துள்ளனர். செந்தூர் கிராம சந்திப்பில், திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அவர்களது வாகனம் வந்தபோது, காரிலிருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் காரை நோக்கி கையைக் காட்டி நிறுத்தியுள்ளனர்.
காரை ஓட்டி வந்த பாபு உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்கினார். காரின் முன் பகுதியில் உள்ள பானட்டை திறந்து பார்த்துள்ளார். அவருக்கு சண்முகம் உதவியுள்ளார்.
அந்த சமயத்தில் கிராமத்தினர் ஜீப்பை சுற்றி சூழ்ந்து நின்று என்ன, ஏது என்று பார்த்துள்ளனர். அப்போது திடீரென ஜெலட்டின் குச்சிகள் வெடித்துள்ளன.
பக்கத்தில் சென்ற காரும் வெடித்தது:
இதில் ஒரு குழந்தை, நான்கு பெண்கள் உள்பட 20 பேர் பலியாகி விட்டனர். அந்த சமயத்தில் சாலையை கடந்து டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்த இரு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இந்த விபத்தில் இறந்து விட்டனர்.
காயமடைந்தவர்கள் திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்தனர் என்றார்.
வெடி விபத்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவுக்குக் கேட்டுள்ளது. ஒரு மைல் தொலைவில் இருந்தவர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
ராமதாஸ் ஆறுதல்
சம்பவம் குறித்து அறிந்ததும் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனம் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,இறந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். இடிந்து போய் விட்ட வீடுகளை அரசே கட்டித் தர வேண்டும் என்றார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications