வெடி விபத்து: பலியானோர் குடும்பங்களுக்குரூ.1 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின்
விழுப்புரம்:விழுப்புரம் அருகே நடந்த கோர வெடிவிபத்தில் உயிரழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1லட்சம் இழப்பீடு வழங்கப்படும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகே செந்தூரில் கோர வெடிவிபத்து நடந்த இடத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் திண்டிவனம் மருத்துவமனைக்குச் சென்ற அவர் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்து நலம் விசாரித்தார்.
முன்னதாக செந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பபடும்.விபத்துக்குக் காரணமான வாகனத்தில் ஜெலட்டின், டெட்டனேட்டர்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆர்.டி.எக்ஸ் இல்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர் என்றார்.
ஜெயலலிதா ஆறுதல்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து நலம் விசாரித்தார், ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மிகவும் கொடுமையான சம்பவம் இது. அதிமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெற்றதில்லை.
அதிமுக ஆட்சியில், நெடுச்சாலை ரோந்துப் பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் இதுபோன்ற கடத்தல் உள்ளிட்டவை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
நெடுஞ்சாலைத் துறையினரின் தவறால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிதியும் வழங்கியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
இவர்கள் தவிர மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் சம்பவம் நடந்த கிராமத்திற்குச் சென்று பார்வையிட்டு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
வெடிவிபத்தினால் செண்டூர் கிராமமே அதிர்ச்சியில் மூழ்கிக் கிடக்கிறது. பலத்த வெடிச் சப்தத்தால் பலரது காதுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பலருக்கு காது கேட்கவில்லை. எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சி அளிக்கிறது.
இந்த விபத்தில் மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம்
செண்டூரைச் சேர்ந்த முத்து (80), ஏழுமலை (40), முருகன் (40), ஆனந்தாயி (45), தனம் (80), அம்மு (15), சுந்தரராம ரெட்டியார், முத்துராம ரெட்டியார், சின்னத்துரை, சின்னப்ப தாஸ், சின்னதாஸ், பாபு, சணமுகம், சாந்தகுமார், ஜெயலலட்சுமி, ஜெயக்கொடி ஆகியோர்.
இவர்களில் முத்துராம ரெட்டியாரும், சுந்தரராம ரெட்டியாரும் அண்ணன், தம்பிகளாம்.
கோர விபத்துக்குக் காரணமா வெடிபொருட்களுடன் வந்த இருவரும் கூட இந்த விபத்தில் பலியாகி விட்டனர். முதலில் அவர்கள் தப்பி விட்டதாக கூறப்பட்டது.
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications