டி.எஸ்.பி. மனைவி தற்கொலை வழக்கு-சிவகாசி ஜெயலட்சுமி விடுதலை
திண்டுக்கல்:திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரனின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கிலிருந்து சிவகாசி ஜெயலட்சுமியும், ராஜசேகரனும் விடுதலை செய்யப்பட்டனர்.
![]() |
தென் மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.பி. முதல் ஏட்டு வரை காவல்துறையினர் மீது சரமாரியாக புகார்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி. பின்னர் இவர் கூறிய புகார்களே பூமராங் மீது ஜெயலட்சுமி மீது திரும்பி அவர் மீது பல்வேறு மோசடிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
ஜெயலட்சுமி மீது நகை மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன. இதில் திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரன் மனைவி விசாலாட்சியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கும் ஒன்று.
கடந்த 2000மாவது ஆண்டு ஜெயலட்சுமியை ராஜசேகரன் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த அவரது மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ராஜசேகரன், ஜெயலட்சுமி மீது வழக்கு தொடரப்பட்டது.
![]() |
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம், இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. மேலும் ஜெயலட்சுமிக்கு ரூ. 5000 அபராதமும், ராஜசேகரனுக்கு ரூ. 8000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இருவரும் தனித் தனியாக திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.
இருவர் மீதான குற்றச்சாட்டும் சரிவர நிரூபிக்கப்படவில்லை. எனவே இருவரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இருவரிடமும் வசூலிக்கப்பட்ட அபராதப் பணத்தை அவர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் ஜெயலட்சுமி நிரந்தரமாக விடுதலை ஆகியிருக்கும் முதல் வழக்கு இது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!














Click it and Unblock the Notifications