விழுப்புரத்தில் வெடித்தது ஆர்.டி.எக்ஸ்.: ஜெ.
சென்னை: விழுப்புரத்தில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு ஒரு பயங்கவாதச் செயல். வெடித்தது ஆர்.டி.எக்ஸ். தான் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் அருகே செண்டூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாதச் செயல்.
இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருப்பதால், வெடித்தவை சாதாரண கல் உடைக்கிற வெடிபொருட்களாக இருக்க முடியாது. இது நிச்சயம் ஆர்டிஎக்ஸ் தான்.
எனது ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணி என்ற திட்டத்தை ஏற்படுத்தியிருந்தேன். தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளை 80 பிரிவுகளாக பிரித்து 24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொள்வதற்காக, ஒரு பிரிவுக்கு 2 வீதம், மொத்தம் இதற்கென்றே 160 வாகனங்களை வழங்கி இருந்தேன்.
அந்த வாகனங்கள் எங்கே போனது? அந்த திட்டமே இப்போது கைவிடப்பட்டு உள்ளதா என்று தெரியவில்லை. இந்த நெடுஞ்சாலை ரோந்து பணி ஒழுங்காக நடைபெற்றிருந்தால் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.
இது போன்ற பயங்கரவாதச் செயல்களை மேலும் வளரவிடக் கூடாது. தொடரவிடக் கூடாது, மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து விரைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டை பேரழிவில் இருந்து மீட்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications