போலி பாஸ்போர்ட்டுடன் லண்டன் செல்லமுயன்ற 5 இலங்கைத் தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட்டுடன் லண்டன் செல்ல முயன்ற 2 பெண்கள் உள்பட 5 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையிலிருந்து லண்டன் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. அப்போது பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது 2 பெண்கள் உள்ளிட்ட 5 இலங்கைத் தமிழர்களின் பாஸ்போர்ட் போலியானது எனத் தெரிய வந்தது. இத்தாலியில் அந்த பாஸ்போர்ட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து ஐந்து பேரையும் விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications