ஸ்டாலின் பேச்சு-அதிமுக, மதிமுக வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சட்டசபையிலிருந்து இன்று அதிமுக, மதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை சட்டசபை தொடங்கியதும் முதலில் மறைந்த முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் உள்ளாட்சிதுறை மானிய கோரிக்கை குறித்த விவாததுக்கு பதிலளித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசத் தொடங்கியவுடன் எழுந்த அதிமுக எம்எல்ஏக்கள், கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தபோது வன்முறை நடந்தாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.
அவர்களுடன் மதிமுக எம்எல்ஏக்களும் வெளியேறினர். நேற்றைப் போலவே இன்றும் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர்.












Click it and Unblock the Notifications