இன்டர்நெட் நட்பு: பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி- தொழிலதிபர் கைது
சென்னை:இன்டர்நெட்டில் நட்புடன் பழகிய பின்னர் ரூ.20 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தவர் ராஜீவ் மேனன்(39).
இன்டர்ெநட்டில் சேட்டிங்கின்போது சென்னையைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணாண வழக்கறிஞர் இந்துவுடன் நட்பு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்துப் பேசினர்.
கடந்த 2002ம் வருடம் முதல் சென்னையில் தங்கியிருந்த மேனன், இந்துவிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். அதை ஒரு வாரத்தில் திருப்பி கொடுத்துவிட்டார்.
அடுத்த சில நாட்களில் ரூ.8 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அதை திருப்பித் தரவில்லை.
இதே போல மையிலாப்பூரில் இன்டர்நெட் சென்டர் வைத்திருக்கும் தினேஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார்.
இவர்கள் இருவரும் பணத்தை திருப்பி கேட்டதால் சென்னையில் தனது ஜாகையை காலி செய்து கொண்டு கொல்கத்தாவுக்கு சென்றுவிட்டார்.
பலமுறை பணம் கேட்டும் மேனன் பதில் தராததால், இந்து இதுகுறித்து போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரணிடம் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் கூடுதல் துணை கமிஷ்னர் சின்னதம்பி தலைமையிலான போலீஸார் கொல்கத்தா சென்றனர்.
அங்கு ராஜீவ் மேனனை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது ரேனா என்பவரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மேனன் ரூ.2 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications