இடஒதுக்கீடு தடை-எதிர்த்து நாளை அப்பீல்
டெல்லி: உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இது ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாளை மத்திய அரசு அப்பீல் மனு தாக்கல் செய்யவுள்ளது.
ஐஐஎம், ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து நாடு முழுவதும் பேராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஸ்டிரைக் நடந்தது.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங், இந்த தடையை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மத்திய அரசு அப்பீல் மனு தயார் செய்துள்ளது. இதில் உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் வகான்வதி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி வாதாடவுள்ளனர்.












Click it and Unblock the Notifications