திருச்செந்தூரில் யாகம் நடத்தத் தடை இல்லை
சென்னை:திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாகம், ஹோமம் நடத்தத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டசபையில் தெரிவித்தார்.
இன்று சட்டசபையில், அதிமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் எழுந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாகம், ஹோமம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது குறித்துக் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த பெரியகருப்பன், முருகன் கோவிலில் யாகம், ஹோமம் நடத்த தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
முன்பு வள்ளி குகை முன்புயாகம், ஹோமம் நடத்தப்பட்டது. ஆனால் சிலர் கோவில் பிரகாரத்தில் யாகம் நடத்தத் தொடங்கினர். இதனால் கோவில் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டது. மற்ற பக்தர்களுக்கும் இது இடையூறாக இருந்தது.
இதனால் கோவில் அறங்காவலர் குழு எடுத்த முடிவின்படி தற்போது சன்னிதானத்தில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. தனியாக மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications