சட்டசபையைக் கலக்கிய சன், ஜெயா!
சென்னை:சன் டிவி, ஜெயா டிவி தொடர்பாக சட்டசபையில் இன்று சூடான விவாதம் நடந்தது.
தமிழக சட்டசபையில் இன்று வருவாய், சிறைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அதிமுக உறுப்பினர் ஹரி எழுந்து, அதிமுக ஆட்சியில், கொண்டு வரப்பட்ட கேபிள் டிவி சட்டம் குறித்துப் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழகத்திலேயே சன் டிவி மட்டும்தான் கேபிள் டிவி நிறுவனம் நடத்துவது போல தவறான கருத்து உள்ளது. பெரும்பான்மையான கேபிள் டிவி நிறுவனங்களை அதிமுகவினர்தான் நடத்துகின்றனர் என்று கூறி அதுதொடர்பான ஒரு பட்டியலையும் வாசித்தார்.
அப்போது, மேட்டூரில் ராஜாராம் என்பவர் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செ.மா.வேலுச்சாமியின் உறவினர் என்றார்.
அப்போது எழுந்த செ.மா. வேலுச்சாமி, ராஜாராம் எனது உறவினர் என்பதை அமைச்சர் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.
அதற்குப் பதில் அளித்த ஆற்காடு வீராசாமி, அதற்கு ஆதாரம் உள்ளது. நிரூபிக்க முடியும் என்று கூறி அமர்ந்தார். பின்னர் மீண்டும் எழுந்து, ராஜாராம் முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலையின் உறவினர். அவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்தானே என்று கூறியபோது அதிமுகவினர் கேலி செய்து குரல் எழுப்பினர்.
பின்னர் ஆற்காடு வீராசாமி தொடர்ந்து பேசுகையில், கேபிள் டிவி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர முடியாது. அதனால்தான் ஆளுநரால் அது திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன், மத்தியில் நீங்கள்தானே ஆட்சியில் உள்ளீர்கள். மத்திய அரசிடம் சொல்லி சட்டத் திருத்தம் கொண்டு வரலாமே என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, மத்திய அரசாலும் இந்த சட்டதத்தைக் கொண்டு வர முடியாது என்றார். பின்னர் மீண்டும் பேசிய ஆற்காடு வீராசாமி, சன் டிவி ஒரு தனி நபரின் குடும்பச் சொத்து அல்ல. அது பிரைவேட் லிமிட்டெட் கம்பெனி.
3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு வழக்குகளை வெளியிடுகிறார்கள். வருமான வரித்துறைக்கும் முறையாக வரி கட்டுகிறார்கள். ஆனால் ஜெயா டிவி யாருடையது, அதன் உரிமையாளர் யார், அதன் கணக்கு வழக்கு என்ன. அந்த விவரத்தை அதிமுகவினர் தெரிவிக்கத் தயாரா என்றார்.
அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், வருமான வரித்துறைதான் உங்களிடம் உள்ளதே, நீங்களே விசாரித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே என்றார்.
அதற்குப் பதில் தந்த ஆற்காடு வீராசாமி, அதை விசாரித்தபோதுதான் அதில் பல பினாமிகள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது. அதை உங்களது வாயால் அறியத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்றார். இப்படியாக விவாதம் படு சூடாக போனது.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications