ராமர் பாலம்-நாளை இந்து இயக்கங்கள்பேராட்டம்: சிங்கால், சு.சுவாமி பங்கேற்பு
ராமேஸ்வரம்:சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமஸ்வரத்தில் இந்து இயக்கங்களின் சார்பில் நாளை பேராட்டம் நடைபெறுகிறது. இதில் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக தலைவர் அசோக் சிங்கால் கலந்து கொள்கிறார்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக தனுஷ்கோடி கடலில் உள்ள ராமர் பாலத்தை (ஆதாம் பாலம்) இடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு இந்து இயங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ராமர் பாலத்தை பாதுகாக்க ராமஸ்வரத்தில் ராமர் பாலம் பாதுகாப்பு குழு தலைவர் குப்புராம் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக தலைவர் அசோக் சிங்கால், துணை தலைவர் வேதாந்தம், சுவாமி தயானந்த சரஸ்வதி, பாஜக மாநில தலைவர் இல.கணேசன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இந்து முன்னணி நிறுவனர் தலைவர் ராமகோபாலன், ஆர்எஸ்எஸ் மாநில தலைவர் மாரிமுத்து மற்றும் பல்வேறு இந்து இயக்க தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications