ஆபாச எஸ்எம்எஸ்: தவில் வாத்தியார் கைது
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:இசைப் பள்ளி மாணவிக்கு செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய தவில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் தவில் ஆசிரியராக இருப்பவர் சந்திரசேகரன் (47). நாகப்பட்டனம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தனது பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவிக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை செய்து வந்துள்ளார் சந்திரசேகரன். பொறுத்துப் பார்த்த அந்த மாணவி, கடைசியில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டார்.
போலீஸார் விசாரணை நடத்தி தவில் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications