கைக் குழந்கையுடன் விபச்சாரம்: சிக்கிய அழகிகள்
புதுச்சேரி:புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையத்தில் கைக் குழந்தையுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேரை போலீஸார் அதிரடி ரெய்டு நடத்திப் பிடித்தனர்.
மேட்டுப்பாளையம், வி.பி.சிங் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஆண், பெண் நடமாட்டம் சந்தேகத்திற்கிடமான வகையில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் போனது.
இதையடுத்து அந்த வீட்டை போலீஸார் கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது, 5 பெண்களுடன் ஒரு ஆண் ஜாலியாக இருந்தது தெரிய வந்தது.
போலீஸாரைப் பார்த்தவுடன் அனைவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீஸார் அனைவரையும் வளைத்துப் பிடித்தனர். அந்த வீட்டின் இன்னொரு அறையில் போலீஸார் பார்த்தபோது, பெண்களை ஏற்பாடு செய்த புரோக்கரும், கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணும் இருந்தனர்.
கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணும் விபச்சாரம் செய்வதற்காகவே அங்கு வந்து காத்திருந்தாராம். அனைவரையும் கைது செய்த போலீஸார், அந்த நபர் யார் என்று விசாரித்தபோது, அவரது பெயர் ராஜா மொய்தீன் பாட்ஷா என்பதும், சென்னை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் முக்கியப் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.
அவரது லேப்டாப் கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications