சென்னையில் நள்ளிரவில் வீடு புகுந்து கொலை:கள்ளக் காதல்? -மனைவி மீது போலீஸ் சந்தேகம்
சென்னை:சென்னையில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கட்டிடக்கலை நிபுணரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சராமாரியாக குத்தி கொலை செய்தது.
![]() |
சென்னை தரமணியை சேர்ந்த பார்த்தீபன் (35) ஆர்கிடெக்ட் (கட்டிடக் கலை நிபுணர்) ஆவார். இவரது மனைவி அபிராமி (25). இருவரும் தரமணி பெரியார் நகர் ராமசாமி தெருவில் வசித்து வந்தனர்.
நேற்றிரவு சுமார் 2.30 மணியளவில் 2 மர்ம நபர்கள் பார்த்தீபன் வீட்டு கதவை தட்டினர். அபிராமி கதவை திறந்தார். அப்போது அந்த மர்ம நபர்கள் அபிராமியின் கையில் கத்தியால் வெட்டினர். இதில் அவர் காயம் அடைந்து மயங்கி கிழே விழுந்தார்.
![]() |
![]() |
இதையடுத்து அந்த மர்ம நபர்கள் பார்த்தீபன் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்று அங்கு பார்த்தீபனை சராமாரியாக கத்தியால் குத்தினர். இதில் பார்த்தீபன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அபிராமி அணிந்திருந்த 5 பவுன் நகையை மட்டும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பார்த்தீபன் வீட்டிற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபோட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடத்தற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் காட்டமாக பார்த்தீபனின் மனைவியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அபிராமியின் 5 பவுன் நகையை மட்டும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதால் அபிராமி மீது போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். பார்த்தீபனுக்கு அபிராமிக்கு இடையே தகராறு ஏதாவது ஏற்பட்டு பார்த்தீபன் கொல்லப்பட்டிருக்கலாமா அல்லது கள்ளக் காதல் காரணமா என போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications