பிலிப்பைன்ஸ்-7 பேர் தலையை வெட்டி கொலைஅல்-கொய்தா துணை அமைப்பு வெறியாட்டம்
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்சில் 7 தொழிலாளர்களைக் கடத்தி தலைகளைத் துண்டித்து அவற்றை பார்சல்கள் மூலம் ராணுவ முகாமில் கொண்டு வந்து ேபாட்டுள்ளனர் தீவிரவாதிகள்.
பிலிப்பைன்சில் அடிசயாப் என்ற தீவிரவாத இயக்கம், பின் லேடனின் அல் கொய்தா இயக்கத்தின் கிளை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த தீவிரவாத அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஜோலோ தீவு பகுதியிலிருந்து 7 சாலை போடும் தொழிலாளர்களைக் கடத்தியது.
இவர்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அரசுக்கு உதவுவதாக குற்றம் சாட்டி பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் 7 பேரையும் தீவிரவாதிகள் தலையைத் துண்டித்துக் கொலை செய்து விட்டனர்.
துண்டிக்கப்பட்ட தொழிலாளர்களின் தலைகளை பார்சல் செய்து அதை கொண்டு வந்து ராணுவ முகாமில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். இச்சம்பவம் பிலிப்பைன்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications