ஜப்பானில் பயங்கர பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டோக்யோ:ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள ஓகினாவா தீவில் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் இந்த பூகம்பத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
ஓகினாவா தீவுக்கு அருகே உள்ள மியாகோஜிமா என்ற தீவின் கடல் பகுதியில் 40 கிேலாமீட்டர் ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் அளவு 6.7 ரிக்டராக இருந்தது.
இதன் காரணமாக 50 செமீ உயரத்திலான சுனாமி அலைகள் எழக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கவும் செய்துள்ளன.
இந்த பூகம்பத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. அதேபோல சுனாமி தாக்குதலாலும் பெரும் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications