For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிடம் அசிங்கம்: கணவரைக் கொன்ற மனைவி விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

செனனை:பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த கணவரைக் கொன்ற மனைவியை சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.

சென்னை ஆவடி அருகே உள்ள பூம்பொழில் நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (45). இவருக்கு சாந்தி (35) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

தினசரி குடித்து விட்டு வந்து மனைவி குழந்தைகளை அடித்து நொறுக்குவார் முனியாண்டி. மனைவியிடம் தினசரி செக்ஸ் சித்திரவதையும் செய்வாராம். மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் காமவெறி தலைக்கேற பெற்ற மகளையே பாலியல் பலாத்காரமும் செய்து வந்துள்ளார்.

இதை அறிந்த சாந்தி அதிர்ச்சி அடைந்தார். கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி காமவெறி பிடித்த தனது கணவரை அடித்துக் கொன்றார் சாந்தி. பின்னர் அவரது உடலைப் புதைத்து விட்டு கணவரைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுத்தார்.

விசாரணையில் சாந்திதான் கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவருக்கு உடந்தையாக இருந்ததாக ரமேஷ், நந்தா என்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் நேரடி சாட்சியங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X