ஜெயா டிவி அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் ஜெயா டிவிக்கும் விடுதலைப் புலிகள் பெயரில் மிரட்டல் வந்தையடுத்து, ஜெயா டிவி அலுவலகத்தில் போலீசார் இன்று வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் கூறியாதவது,
ஜெயலிலதாவை மிரட்டி வந்துள்ள கடிதம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தி வருகிறோம். ஜெயா டிவி அலுவலகம் அருகே வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் படை நிறுத்தப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதத்தை அனுப்பியவர்கள் யார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஜெயா டிவி அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.
ஜெயா டிவி அலுவலக பகுதியில் 24 மணி நேர தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications