முதன்முதலாக மதுரையில் வி்மான சாகச நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை: முதன்முதலாக நடைபெற இருக்கும் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்காக 12 விமானங்கள் மதுரைக்கு வந்துள்ளன.
இந்திய விமானப்படையின் பவளவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் விமானப்படையில் உள்ள சூர்ய கிரண் பிரிவு விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.
மாநில நகரங்களில் மட்டுமே நடந்து வந்த இந்த விமான சாகச நிகழ்ச்சிகள், முதன்முதலாக மதுரை விரகனூரில் நாளை மாலை 5.15 மணிக்கு தொடங்கி 20 நிமிடங்கள் நடைபெறவுள்ளது.
இதற்காக நேற்று காலை, சூர்ய கிரண் பிரிவில் உள்ள 12 விமானங்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளன.
இங்குள்ள சில கிராமங்கள் மீது வட்டமிடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை விமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications