நான் பிரியங்கா காந்தி அல்ல!
சுல்தான்பூர் (உ.பி.)என்னை யாரும் பிரியங்கா காந்தி என்று கூப்பிட வேண்டாம். பிரியங்கா வதேரா என்றே கூப்பிடுங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா கூறியுள்ளார்.
உ.பி. மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார். சுல்தான்பூர் மாவட்டம் திஹ் என்ற கிராமத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது திரளாக கூடியிருந்த கிராமத்தினர் மத்தியில் பிரியங்கா பேசுகையில், என்னை யாரும் பிரியங்கா காந்தி என்று கூப்பிடாதீர்கள். பிரியங்கா வதேரா என்றே கூப்பிடுங்கள் (பிரியங்காவின் கணவர் பெயர் ராபர்ட் வதேரா என்பது குறிப்பிடத்தக்கது).
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஜாதி அரசியலுக்கு விடை கொடுப்பதை மனதில் கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள்.
சிறு வயதிலிருந்து இந்தக் கிராமத்திற்கு நான் பலமுறை வந்து போயுள்ளேன். ஆனால் இப்போது எனது குழந்தைகளுடன் இந்த கிராமத்திற்கு வந்துள்ளேன். இது பெருமையாக உள்ளது என்றார் பிரியங்கா.
பிரியங்காவின் எளிமையான பேச்சும், எளிமையான தோற்றமும் கிராமத்தினரை வெகுவாகக் கவர்ந்து விட்டது. குறிப்பாக அந்தக் கிராமத்துப் பெண்கள் பிரியங்காவின் பேச்சை கைதட்டி வரவேற்று ரசித்தனர்.
-
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications