Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டபம் அருகே கரையொதுங்கியசக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:மண்டபம் கடல் பகுதியில் பயங்கர சேதத்தை விளைவிக்கும் தன்மை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் அடங்கிய தெர்மகூல் பெட்டி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்பட்ட வெடிகுண்டு பார்சல்களிலிருந்து இது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சமீப காலமாக ஆயுதக் கடத்தல் அதிகரித்து வருகிறது. புலிகளுக்காக பலர் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கையில் தற்போது புலிகள் விமான பலமும் பெற்று இருமுறை தாக்குதலும் நடத்தி விட்டதால் கடலோரப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மண்டபம் கடல் பகுதியில் நேற்று ஒரு தெர்மகூல் பெட்டி கரை ஒதுங்கியது. மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகே இந்த பெட்டி கரை ஒதுங்கியது.

இதையடுத்து காவலர் கார்த்திகேயன் அதை எடுத்துப் பார்த்தார். அப்போது அதில், 5 வெடிகுண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

மாவட்ட எஸ்.பி.திருஞானம் உடனடியாக விரைந்து வந்தார். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். 10 அங்குல நீளம், 2 அங்குல அகலம் கொண்ட அந்த வெடிகுண்டுகள், தற்கொலைப் படையினர் உடலில் கட்டிக் கொள்ளும் வகையிலான குண்டுகள் ஆகும்.

இதுதவிர ராக்கெட் லாஞ்சர் மூலம், ரிமோட் கண்ட்ரோல் மூலமும் வெடிக்க வைக்கலாமாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த குண்டு வெடித்தால் மிகப் பெரிய அளவுக்கு உயிர்ச் சேதம் ஏற்படுமாம்.

வெடிகுண்டுகள் இன்னும் செயலிழக்காத நிலையில் உள்ளன. எனவே அவற்றை வெளியே எடுத்து ஆய்வு செய்யும் முடிவை நிபுணர்கள் கைவிட்டனர். பின்னர் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கச் செய்யும் நிபுணர் குழுவுக்குத் தகவல் தரப்பட்டு அக்குழுவினர் மதுரையிலிருந்து மண்டபம் விரைந்தனர்.

பின்னர் வெடிகுண்டுகளைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் வெடிகுண்டுகள் இருந்த பெட்டியில் பிளாஸ்டிக் நூலை கட்டி கிட்டத்தட்ட 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டு அந்த நூலை அசைத்தனர். ஆனால் குண்டு வெடிக்கவில்லை. இதையடுத்து அந்த குண்டுகள் செயலிழந்தைவயாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த குண்டுகள் மண்டபம் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மிக மிக சக்தி வாய்ந்த குண்டுகள் சிக்கியதால் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் நிலவியது. மண்டபம் முகாமுக்குள் உள்ள பள்ளிக்கூடம் விடுமுறை விடப்பட்டு குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

அகதிகள் அருகே குண்டுகள் கரை ஒதுங்கியதால் இந்த சம்பவத்தில் அகதிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+