மண்டபம் அருகே கரையொதுங்கியசக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்
ராமேஸ்வரம்:மண்டபம் கடல் பகுதியில் பயங்கர சேதத்தை விளைவிக்கும் தன்மை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் அடங்கிய தெர்மகூல் பெட்டி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்பட்ட வெடிகுண்டு பார்சல்களிலிருந்து இது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சமீப காலமாக ஆயுதக் கடத்தல் அதிகரித்து வருகிறது. புலிகளுக்காக பலர் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கையில் தற்போது புலிகள் விமான பலமும் பெற்று இருமுறை தாக்குதலும் நடத்தி விட்டதால் கடலோரப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மண்டபம் கடல் பகுதியில் நேற்று ஒரு தெர்மகூல் பெட்டி கரை ஒதுங்கியது. மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகே இந்த பெட்டி கரை ஒதுங்கியது.
இதையடுத்து காவலர் கார்த்திகேயன் அதை எடுத்துப் பார்த்தார். அப்போது அதில், 5 வெடிகுண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
மாவட்ட எஸ்.பி.திருஞானம் உடனடியாக விரைந்து வந்தார். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். 10 அங்குல நீளம், 2 அங்குல அகலம் கொண்ட அந்த வெடிகுண்டுகள், தற்கொலைப் படையினர் உடலில் கட்டிக் கொள்ளும் வகையிலான குண்டுகள் ஆகும்.
இதுதவிர ராக்கெட் லாஞ்சர் மூலம், ரிமோட் கண்ட்ரோல் மூலமும் வெடிக்க வைக்கலாமாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த குண்டு வெடித்தால் மிகப் பெரிய அளவுக்கு உயிர்ச் சேதம் ஏற்படுமாம்.
வெடிகுண்டுகள் இன்னும் செயலிழக்காத நிலையில் உள்ளன. எனவே அவற்றை வெளியே எடுத்து ஆய்வு செய்யும் முடிவை நிபுணர்கள் கைவிட்டனர். பின்னர் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கச் செய்யும் நிபுணர் குழுவுக்குத் தகவல் தரப்பட்டு அக்குழுவினர் மதுரையிலிருந்து மண்டபம் விரைந்தனர்.
பின்னர் வெடிகுண்டுகளைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் வெடிகுண்டுகள் இருந்த பெட்டியில் பிளாஸ்டிக் நூலை கட்டி கிட்டத்தட்ட 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டு அந்த நூலை அசைத்தனர். ஆனால் குண்டு வெடிக்கவில்லை. இதையடுத்து அந்த குண்டுகள் செயலிழந்தைவயாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த குண்டுகள் மண்டபம் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மிக மிக சக்தி வாய்ந்த குண்டுகள் சிக்கியதால் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் நிலவியது. மண்டபம் முகாமுக்குள் உள்ள பள்ளிக்கூடம் விடுமுறை விடப்பட்டு குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அகதிகள் அருகே குண்டுகள் கரை ஒதுங்கியதால் இந்த சம்பவத்தில் அகதிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications