For Daily Alerts
Just In
தமிழர் பகுதியில் இலங்கை விமானங்கள் தாக்குதல்
கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகளில் விமானப் படை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பல குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாயின.
இலங்கையில் பலாலி ராணுவ முகாம் மற்றும் கொழும்பு விமான நிலையங்கள் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த பதில் தாக்குதல் நடந்துள்ளது.
மன்னார் பரப்பு கடந்தான் பகுதியில் தமிழர்கள் குடியிருப்புகள் குறிவைத்து கிபீர் ரக விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான தமிழர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. விவசாய நிலங்களும் சேதமடைந்தன.
இந்நிலையில் மற்றொரு பகுதியிலிருந்து ராணுவத்தினர் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களும் நடத்தியுள்ளனர்.
Comments
ராணுவம் தாக்குதல் இலங்கை பாதிப்பு air force field attack house வீடுகள் குண்டு வீச்சு தரைமட்டம் விவசாய நிலங்கள்
Story first published: Saturday, April 28, 2007, 5:30 [IST]