பாலாறு பிரச்சினை-நெடுமாறன் கூறும் யோசனை
காஞ்சிபுரம்:பாலாறுப் பிரச்சினையைத் தீர்க்க கட்சி சார்பற்ற குழுவை அமைத்து, தீர்வுக்கான வழிகள் குறித்து ஆராய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாலாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரச்சினை குறித்து விவாதிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு நெடுமாறன் பேசுகையில், பாலாறுப் பிரச்சினையத் தீர்க்க முதலில் கட்சி சார்பற்ற குழுவை அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பாலாறு பாசனப் பகுதி விவசாயப் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். பாலாறு வடி நிலம் பாலைவனமாகி விடாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து இந்தக் குழு மூலம் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
தமிழகத்தின் 70 சதவீத விவசாய நீர்த் தேவை, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய நதிகளை நம்பியே உள்ளது. எனவே இந்த மூன்று நதிகளிலும் தமிழகத்திற்கு உள்ள உரிமையை விட்டு விடக் கூடாது. அப்படி நேர்ந்தால் தமிழம் பாலைவனமாகி விடும்.
கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் எடுத்து வந்த திட்டமிட்ட நடவடிக்கையால் நமது மாநிலத்தின் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டது.
தமிழகத்தில் இன்று விற்பனை செய்யப்பட்டு வரும் அரிசியில் பெரும்பாலானவை கர்நாடகத்திலிருந்தும், ஆந்திராவிலிருந்தும்தான் வருகின்றன என்பதை தமிழக மக்களில் பெரும்பாலானோருக்குத் தெரியாது.
நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்றாமல் கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் பிடிவாதம் பிடிக்கும் போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த மாநிலங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காப்பது வியப்பாக உள்ளளது வேதனையாக உள்ளது என்றார் நெடுமாறன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications