ரூ.10 லட்சம் மோசடி: வக்கீல் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் முருகானந்தம். இவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த தாமஸ் என்பவரை அணுகினார். அதே பகுதியில் டேவிட் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான நிலம் ரூ. 30 லட்சத்துக்கு விலைக்கு வருகிறது, இந்த விலை மிகவும் குறைவானது. இதை நான் உங்களுக்கு வாங்கித் தருகிறேன் என்று தாமஸிடம் கூறியுள்ளார்.

அதற்கு அட்வான்ஸாக டேவிட் பிரபாகரன் பெயரில் ரூ. 10 லட்சத்துக்கு செக் கொடுத்துள்ளார் தாமஸ். இந்த செக்கை வாங்கிய முருகானந்தம், டேவிட் பிரபாகரன் பெயரில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் போலியாக ஒரு அக்கவுண்ட்டை ஆரம்பித்தார். பின்னர் செக்கை அந்தக் கணக்கில் போட்டு பணத்தை எடுத்துக் கொண்டார். அத்தோடு தாமஸை மறந்து விட்டார்.

முருகானந்தம் செய்த மோசடியால் அதிர்ந்த தாமஸ், மத்திய குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+