12 தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலை:இலங்கை தமிழ் எம்.பி. தகவல்
Subscribe to Oneindia Tamil
மானாமதுரை:விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய கடல் எல்ைலையைக் கடந்ததால்தான் தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் சிறை பிடித்தனர். அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
தமிழக மீனவர்களை ஒருபோதும் விடுதலைப் புலிகள் ெகான்றில்லை. 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்றுள்ளது இலங்கை கடற்படைதான்.
விடுதலைப் புலிகள் மீது பழி போட இலங்கை கடற்படைதான் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது என்றார் சிவாஜி லிங்கம்.












Click it and Unblock the Notifications