ஜல்லிக்கட்டு: மாடு முட்டி 2 பேர் பலி
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுகள் குத்தியதில் 2 பேர் பலியானார்கள். 100 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் 3 இடங்களில் நேற்று மாலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
வடசேரிப்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் இதில் ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. மாடுகளைப் பிடிக்க இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது. முண்டியடித்துக் கொண்டு மாடுகளைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது பாண்டியன் (26) என்ற இளைஞரை மாடு முட்டித் தூக்கி வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 35 பேர் காயமடைந்தனர்.
இதேபோல பரம்பூர் என்ற கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் செல்வராஜ் ென்பவர் மாடு முட்டி பலியானார். 50 பேர் காயமடைந்தனர்.
ஒட்டக்குளம் என்ற கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாமல், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications