புலிகள்: வைகோ மீது நடவடிக்கை கோரிகருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
சென்னை:விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தெரிவித்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வற்புறுத்தினார்.
முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,
மதிமுக பொதுசெயலாளர் வைகோ விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வரிடம் பேசினேன்.
தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவு அளிப்போம் என்பது கண்டிக்கதக்க ஒன்றாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வரிடம் வற்புறுத்தியுள்ளேன்.
வைகோ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து யோசனை செய்து முடிவு எடுப்பதாக முதல்வர் கூறினார். தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு யார் ஆதரவு தந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர்கள் மீது எல்லோருக்கும் அக்கறை இருக்கிறது.
விடுதலைப் புலிகள் கடத்தி சிறை வைத்திருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டேன்.
முதல்வரின் சட்டமன்ற பொன்விழா பொதுக் கூட்டம் வரும் மே மாதம் 11ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கலந்து கொள்வது குறித்தும் பேசினோம் என்றார்.












Click it and Unblock the Notifications