என்னை கைது செய்ய திமுக முயற்சி- வைகோ
சென்னை:இலங்கை தமிழர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளை தொடர்ந்து ஆதரிப்பேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் மதிமுக பொது செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நிலையில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
விடுதலைப் புலிகள் குறித்து சொல்வதற்கு எதுவும் புதிதாக இல்லை. புலிகள் தொடர்பாக நான் கூறி வரும் கருத்துகளை தான் இப்போதும் கூறியுள்ளேன்.
பிரதமரை நான் சந்தித்த போது நான் கூறிய கருத்துகளை தான் அறிக்கையாக வெளியிட்டேன். இந்தியாவில் நாங்கள் எந்த வன்முறையில் ஈடுபட்டதில்லை, வன்முறையை ஆதரித்ததுமில்லை.
இலங்கை வெறியர்கள் தமிழர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்து வருகின்றனர். இதனால் ஈழத்தில் தமிழர்கள் துன்பப்படுகின்றனர்.
அவர்களுக்கு நிரந்தர தீர்வு காண விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். தமிழர்களும், அவர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளும் வெல்ல வேண்டும் என்ற கருத்தை தான் நான் கூறியுள்ளேன்.
என்னுடைய இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், திமுக அரசு காங்கிரஸை ஆயுதமாக பயன்படுத்தி என்னை கைது செய்ய துடிக்கிறது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications