என்னை கைது செய்ய திமுக முயற்சி- வைகோ
சென்னை:இலங்கை தமிழர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளை தொடர்ந்து ஆதரிப்பேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் மதிமுக பொது செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நிலையில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
விடுதலைப் புலிகள் குறித்து சொல்வதற்கு எதுவும் புதிதாக இல்லை. புலிகள் தொடர்பாக நான் கூறி வரும் கருத்துகளை தான் இப்போதும் கூறியுள்ளேன்.
பிரதமரை நான் சந்தித்த போது நான் கூறிய கருத்துகளை தான் அறிக்கையாக வெளியிட்டேன். இந்தியாவில் நாங்கள் எந்த வன்முறையில் ஈடுபட்டதில்லை, வன்முறையை ஆதரித்ததுமில்லை.
இலங்கை வெறியர்கள் தமிழர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்து வருகின்றனர். இதனால் ஈழத்தில் தமிழர்கள் துன்பப்படுகின்றனர்.
அவர்களுக்கு நிரந்தர தீர்வு காண விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். தமிழர்களும், அவர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளும் வெல்ல வேண்டும் என்ற கருத்தை தான் நான் கூறியுள்ளேன்.
என்னுடைய இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், திமுக அரசு காங்கிரஸை ஆயுதமாக பயன்படுத்தி என்னை கைது செய்ய துடிக்கிறது என்றார் வைகோ.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications