3 காங். எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது.

இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில்,

எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது.

ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு கூறியுள்ளது.

ஆனால், இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். இதனால் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டேன் என்றார்.

ஏற்கனவே நக்ஸல்களின் ஹிட் லிஸ்டில் இருப்பவர் ஞானசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது வீட்டுக்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு உண்டு. இப்போது அவரது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த விஷயத்தில் சுதர்சனத்தின் கருத்தை அறிய முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+