ஈராக் குண்டுவெடிப்பில் திருச்சி, மதுரை,மானாமதுரையைச் சேர்ந்த 3 பேர் பலி
திருச்சி:ஈராக்கில் நடந்த கார் குண்டுவெடிப்பில் திருச்சியைச் சேர்ந்த தொழிலாளி பலியானார்.
திருச்சி அருகே உள்ள வாகனேரி, உப்பிலியாத் தெருவைச் ேசர்ந்தவர் பெருமாள். இவருக்கு கணேசன் (21), மாரிமுத்து, முனீஸ்வரன் என மூன்று மகன்கள். பால் வியாபாரம் செய்து வருகிறார் பெருமாள்.
![]() |
கணேசனின் சித்தப்பா புகழேந்தி ஈராக்கில் வேலை பார்த்து வருகிறார். அவர் மூலமாக கணேசன் கடந்த ஆண்டு மே மாதம் ஈராக்கில் வேலைக்குச் சேர்ந்தார்.
ராணுவ வீரர்களுக்கு உணவு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் கணேசன். இந்த நிலையில் புதன்கிழமை இரவு தனது வீட்டுடன் தொடர்பு கொண்டு பேசினார் கணேசன். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து கார் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார்.
கணேசனுடன் மேலும் 4 பேரும் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். இத்தகவல் நேற்று அதிகாலை கணேசன் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
கணேசன் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த செய்தியை அறிந்த புகழேந்திக்கு மன நலம் பாதிக்கப்பட்டது. அவர் ஈராக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கணேசனின் குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.
கணேசனின் உடலை திருச்சிக்குக் ெகாண்டு வர உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கணேசன் குடும்பத்தினர் கோரியுள்ளனர். இதையடுத்து தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
![]() |
கணேசன் வீட்டுக்கு திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ேடார் சென்று ஆறுதல் கூறினர்.
இந்த குண்டுவெடிப்பில் இறந்த மற்ற 3 பேரில் ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், இன்னொருவர் மானாமதுரையைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது நபர் நேபாளத்தைச் ேசர்ந்தவர் என்று தெரிகிறது.
கணேசன் 1 லட்சம் செலவு செய்து ஈராக் சென்றுள்ளார். வேலையில் சேர்ந்த பின்னர் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம வரை அனுப்பியுள்ளார். புதன்கிழமை இரவு போனில் பேசியபோது கூட ரூ. 25 ஆயிரம் பணம் அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறிது நேரத்தில் கார் குண்டுவெடிப்பில் சிக்கி பலியாகியுள்ளார். கணேசனின் மரணத்தால் வரகனேரி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்














Click it and Unblock the Notifications