திருவண்ணாமலை: கலசங்கள் திருட்டு போகவில்லை- நிர்வாகம்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி கவசங்கள் திருட்டு போகவில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் தனுஷ், அறங்காவலர்கள் கோவிந்தன், மணிவர்மா, பானுமதி அருணகிரி, சீனுவாசன் ஆகியோர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில்,
பழமையும், புகழுமிகக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோயிலில் இருந்த தங்கம், வெள்ளி கவசங்கள் திருட்டு போனதாக பொய்யான செய்தி சில நாளிதழ்களில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இது தவறான செய்தி, கவசங்கள் திருட்டு போனதாக வெளியான செய்தி குறித்து கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பொக்கிஷதாரர்களை அழைத்து விளக்கம் கேட்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட பிரதோஷ நாயகர் கவசம், உபயதாரரால் வழங்கப்பட்டது. அது சரியாக பொருத்தாததால் சரி செய்து கொடுக்கும் படி உபயதாரருக்கு கூறப்பட்டுள்ளது.
அந்த பணி முடிந்ததும், உபயதாரரிடம் இருந்து கவசத்தை பெற்று கோயில் ஆவணத்தில் பதிவு செய்யப்படும். கோயில் நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடப்பட்டது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.