For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை விமானத்தில் நடு வானில் கோளாறு- 127 பயணிகள் தப்பினர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: மும்பையிலிருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்குக் கிளம்பிய விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஈரானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

துருக்கியைச் சேர்ந்த விமானம் ஒன்று மும்பையிலிருந்து 127 பயணிகளுடன் இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டது.

ஈரான் மீது பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், டெஹ்ரான் விமான நிலையத்தில் தரையிறக்க விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி தரப்பட்டது.

இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் துருக்கியிலிருந்து வேறு விமானம் வந்தது. சுமார் 2 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் பயணிகள் அந்த விமானத்தில், இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டு சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X