சில்லரை வர்த்தகர்களுக்கு தயாநிதி அறிவுரை
சென்னை:சில்லரை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை, அவற்றை எதிர்த்து சில்லரை வணிகர்களும் தங்களது வியாபார உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சில்லரை வணிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வர்த்தகர்கள் நலச் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு கூறினார் தயாநிதி மாறன்.
மாறன் பேசுகையில், பெரிய பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்து விட்டதை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதால் உங்களது வியாபாரம் பெருகி விடாது. அதனால் எந்தப் பயனும் இல்லை. எனவே அதை விட்டு விட்டு உங்களது வியாபாரத்தை அவர்களுக்கு இணையாக பெருக்குவது எப்படி என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
சில்லரை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. வியாபாரத்தில் உத்திகள் மாறிக் கொண்டேதான் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு புதிய மாற்றம் வரும்போது அதில் லேசான குழப்பம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அது தற்காலிகமானதுதான்.
தமிழகத்தில் முன்பு முதல்வர் கருணாநிதி உழவர் சந்தைகளை ஆரம்பித்தபோது காய்கறிக் கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதேபோல மதிப்புக் கூட்டிய வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது பெரும் பாதிப்பு ஏற்படும் என சிலர் கூக்குரலிட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே உங்களுக்குப் பிரச்சினை இருந்தால் தாராளமாக முதல்வரை அணுகி பிரச்சினைகளைக் கூறுங்கள். அதை விட்டு விட்டு மற்றவர் சொல்வதைக் கேட்டு அவர்கள் பின்னால் போனால் குழப்பம்தான் ஏற்படும்.
உழவர்கள் நாட்டின் முதுகெலும்பு என்றால், வர்த்தகர்கள் நாடி நரம்பைப் போன்றவர்கள். எனவே அவர்களின் நலனை முதல்வர் கருணாநிதி உணர்ந்துள்ளார். அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட அனுமதிக்க மாட்டார் என்றார் தயாநிதி மாறன்.
-
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications