Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியாறு அணையில் கேரள குழு ஆய்வு

Subscribe to Oneindia Tamil

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு நியமித்துள்ள அணை பாதுகாப்புக் குழு, பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு நடத்த இன்று காலை தமிழகம் வந்தது

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சி எடுத்தது. இதற்கு அணை பலவீனமாக உள்ளதாக கூறி நீர்மட்டத்தை உயர்த்த கேரளா அரசு மறுத்துவிட்டது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அணையின் பலத்தை பரிசோதிக்க உத்தரவிட்டது. இதையடுத்து நிபுணர்கள் குழு ஆராய்ந்து அணை பலமாக இருப்பதாகவும், 142 அடி வரையிலும் அணையின் உயரத்தை கூட்டலாம் என பரிந்துரைத்தது.

இதையடுத்து 142 அடியாக அணையின் உயரத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை கிடப்பில் போட்ட கேரள அரசு தனது மாநில சட்டசபையில், அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

மேலும் அணையின் பலத்தை ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் அணை பாதுகாப்பு குழுவையும் அமைத்தது. இந்த குழு இன்று காலை முல்லை பெரியாறு அணைக்கு வந்தது.

இதில் கேரள தலைமை பொறியாளர் சசி, மின்சார தலைமை பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அணையை ஆய்வு செய்து முடிவை கேரள அரசுக்கு அறிவிப்பர். பின்னர் கேரள அரசு இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+