7.42 லட்சம் போலி பான் கார்டுகள் ரத்து:வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை
டெல்லி: நாடு முழுவதும் 7.42 லட்சம் போலி பான் கார்டுகளை வருமான வரித்துறை கண்டுபிடித்து ரத்து செய்துள்ளது.
வருமான வரி செலுத்துவோர், நிரந்தர கணக்கு எண் என்ற பான் கார்டு பெற வேண்டும். ஆனால் வரி ஏய்ப்பு செய்வதற்காக லட்சக்கணக்கானோர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்துள்ளனர்.
மொத்தம் 13.10 லட்சம் போலி பான் கார்டுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 10,000 பான் கார்டுகள் கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து போலிகார்டுகளையும் நீக்கவேண்டும் என்ற இலக்கை வருமான வரித்துறை நிர்ணயித்தது. இதில் 7.42 லட்சம் போலி பான் கார்டுகள் மட்டுமே நீககமுடிந்துள்ளது.
மீதமுள்ள போலி பான் கார்டுகளை நீக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் டெல்லி நகரங்களில்தான் அதிகபட்சமான போலி பான் கார்டுகள் உள்ளது.
மும்பையில் 1.63 லட்சமும், டெல்லியில் 3.06 லட்சமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 7.42 லட்சம் போலி பான் கார்டுகளை வருமான வரித்துறை ரத்து செய்துள்ளது.