ஜூலை 2ல் மருத்துவ கவுன்சிலிங்
சென்னை:மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் வருகிற 28ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன. ஜூலை 2ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 28ம் தேதி முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தர வரிசைப் பட்டியல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கவுன்சிலிங் ஜூலை 2ம் தேதி நடைபெறும். ஜூலை 8ம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடையும்.
முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்த மாணவர்கள் வகுப்பில் சேர கடைசி நாள் ஜூலை 18ம் தேதி ஆகும். வகுப்புகள் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும். 2வது கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கும். ஆகஸ்ட் 28ம் தேதி 2வது கட்ட கவுன்சிலிங் முடியும். வகுப்புகள் ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும்.
அனைத்துப் பிரிவுக்கும் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதுதவிர ஈரோடு பெருந்துறையில் அரசுப் போக்குவரத்துத் துறையின் மருத்துவக் கல்லூரி உள்ளது. மொத்தமாக 1705 சீட்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications