வரதட்சணை சட்டத்தில் வருகிறது மாற்றம்
டெல்லி: பெண்களுக்கு ஆயுள் காலம் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போது அமலில் உள்ள 1961ம் ஆண்டு வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், கல்யாணமாகி 7 ஆண்டுகளுக்குள்தன் வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் கொடுக்க முடியும். 7 ஆண்டுகளைத் தாண்டிய பெண்களுக்கு இந்த சட்டம் உதவாது.
இந்த சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு கல்யாணமாகி 7 ஆண்டுகளுக்குள் மர்மமான முறையில் இறந்து விட்டால் அதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்படும். அவர் கொடுக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.
தற்போது இச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, 7 ஆண்டு கால உச்சவரம்பு என்பதை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 7 ஆண்டுகள் நீக்கப்பட்டு, மனைவி எப்போது இறந்தாலும் அவர் மரணத்தில் சந்தேகம் என புகார் வந்தால் அதனை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என மாற்றம் செய்யப்படுகிறது.
இதன் மூலம் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என மத்திய அரசு கருதுவதால், இது குறித்து பரிசீலித்து விரைவில் மாற்றம் கொண்டு வரவிருக்கிறது.
இது குறித்து தேசிய பெண்கள் ஆணைய தலைவர் கிரிஜாலியாஸ் கூறுகையில், பெண்களுக்கு வரதட்சணை கொடுமை என்பது கல்யாணமாகி 30 வருடங்கள் வரையிலும் கூட நீடிக்கிறது. இதுபோன்ற கொடுமையிலிருந்து பெண்களைக் காக்க வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தில் நிச்சயம் மாற்றம் தேவையாக இருக்கிறது என்றார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications