பெரியாறு தமிழ்நாட்டிற்கு சொந்தமானதல்ல: பிரேமசந்திரன்
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானதல்ல என கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண், 110 வருட முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது. அதை தமிழகம் நிர்வகித்து வருகிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முல்லை பெரியாறு அணை தமிழ்நாடு பாதுகாவலர் மட்டுமே. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு எல்லா உரிமையிருக்கிறது. ஆனால் இந்த அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது அல்ல.
இந்த அணை அமைந்துள்ள இடம் கேரள அரசினால் தமிழ்நாட்டிற்கு 999 ஆண்டுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சர், அணை தமிழகத்திற்கு சொந்தம் என்று கூறியிருப்பது தவறான தகவலாகும்.இதை அமைச்சர் வேண்டுமென்றே கூறியிருப்பார் என கருதவில்லை.
ஆனால் மத்திய அமைச்சரின் விளக்கம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் நிலைப்பாட்டை பெரிதும் பாதிப்பதாக அமையும். எனவே மத்திய அரசு இது தொடர்பான பிழையை உடனடியாக சரி செய்து வெளியிட வேண்டும்.
கேரள அணை பாதுகாப்பு குழு முல்லை பெரியாறு அணையை சுற்றி பார்த்துவிட்டு அணையின் கீழ் பகுதி நல்ல நிலையில்லை என கூறியுள்ளது. அணையில் விரிசல் உள்ள இடங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க












Click it and Unblock the Notifications