பெரியாறு தமிழ்நாட்டிற்கு சொந்தமானதல்ல: பிரேமசந்திரன்
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானதல்ல என கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண், 110 வருட முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது. அதை தமிழகம் நிர்வகித்து வருகிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முல்லை பெரியாறு அணை தமிழ்நாடு பாதுகாவலர் மட்டுமே. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு எல்லா உரிமையிருக்கிறது. ஆனால் இந்த அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது அல்ல.
இந்த அணை அமைந்துள்ள இடம் கேரள அரசினால் தமிழ்நாட்டிற்கு 999 ஆண்டுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சர், அணை தமிழகத்திற்கு சொந்தம் என்று கூறியிருப்பது தவறான தகவலாகும்.இதை அமைச்சர் வேண்டுமென்றே கூறியிருப்பார் என கருதவில்லை.
ஆனால் மத்திய அமைச்சரின் விளக்கம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் நிலைப்பாட்டை பெரிதும் பாதிப்பதாக அமையும். எனவே மத்திய அரசு இது தொடர்பான பிழையை உடனடியாக சரி செய்து வெளியிட வேண்டும்.
கேரள அணை பாதுகாப்பு குழு முல்லை பெரியாறு அணையை சுற்றி பார்த்துவிட்டு அணையின் கீழ் பகுதி நல்ல நிலையில்லை என கூறியுள்ளது. அணையில் விரிசல் உள்ள இடங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications