பெரியாறு தமிழ்நாட்டிற்கு சொந்தமானதல்ல: பிரேமசந்திரன்
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானதல்ல என கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண், 110 வருட முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது. அதை தமிழகம் நிர்வகித்து வருகிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முல்லை பெரியாறு அணை தமிழ்நாடு பாதுகாவலர் மட்டுமே. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு எல்லா உரிமையிருக்கிறது. ஆனால் இந்த அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது அல்ல.
இந்த அணை அமைந்துள்ள இடம் கேரள அரசினால் தமிழ்நாட்டிற்கு 999 ஆண்டுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சர், அணை தமிழகத்திற்கு சொந்தம் என்று கூறியிருப்பது தவறான தகவலாகும்.இதை அமைச்சர் வேண்டுமென்றே கூறியிருப்பார் என கருதவில்லை.
ஆனால் மத்திய அமைச்சரின் விளக்கம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் நிலைப்பாட்டை பெரிதும் பாதிப்பதாக அமையும். எனவே மத்திய அரசு இது தொடர்பான பிழையை உடனடியாக சரி செய்து வெளியிட வேண்டும்.
கேரள அணை பாதுகாப்பு குழு முல்லை பெரியாறு அணையை சுற்றி பார்த்துவிட்டு அணையின் கீழ் பகுதி நல்ல நிலையில்லை என கூறியுள்ளது. அணையில் விரிசல் உள்ள இடங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.
-
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications