கள்ளக் காதலியுடன் சேர்ந்து கொல்ல மகன்முயற்சி: யாகவா முனிவர் மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கள்ளக்காதலியுடன் சேர்ந்து தன்னைக் கொலை செய்ய மகன் முயற்சிப்பதாக மறைந்த யாகவா முனிவரின் மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை மேடவாக்கத்தில் வசித்து வந்தவர் யாகவா முனிவர். பரபரப்பு சாமியாராக விளங்கியவர். பறவை பாஷை தெரியும் என கூறி மக்களை வியப்பில் ஆழ்த்தியவர். தனக்குத் தானே சமாதியும் கட்டிக் கொண்டவர்.

யாகவா முனிவருக்கு புஷ்பம்மாள் என்ற மனைவியும், சரண் என்ற மகனும் உள்ளனர். யாகவா முனிவர் தற்போது மறைந்து விட்டார். அவரது வீட்டில் புஷ்பம்மாள், சரண், மனைவி ரேணுகாதேவி மற்றும் 2 குழந்தைகள் வசித்து வருகின்றனர்.

தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார் புஷ்பம்மாள். அந்த இடத்தில் சங்கீதா என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அவருக்கும், சரணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த புஷ்பம்மாளும், ரேணுகாதேவியும் சரணைக் கண்டித்துள்ளனர்.

ஆனால் அதைக் கண்டுகொள்ளவில்லை சரண். மாறாக தாயையும், மனைவியும் மிகவும் இழிவாகப் பேசி திட்டியுள்ளார். அத்தோடு நில்லாமல் தனது தாயார் பெயரில் உள்ள சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றித் தருமாறும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், புஷ்பம்மாள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மகனும், சங்கீதாவும் சேர்ந்து கொண்டு என்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். கத்தியால் குத்த வருகின்றனர்.

சங்கீதாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. இந்த நிலையில் எனது மகனை வசியப்படுத்திக் கொண்டு எனக்கு எதிராக தூண்டி விட்டு சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நினைக்கிறார்.

எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் புஷ்பம்மாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+