கருணாநிதிக்கு சட்டசபையில் பாராட்டுபர்னாலா வாழ்த்து-தயாநிதி மாறன் புறக்கணிப்பு
சென்னை:சட்டசபை உறுப்பினராக பொன் விழா காணும் முதல்வர் கருணாநிதிக்கு சட்டசபையில் இன்று ஆளுநர் பர்னாலா மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
சட்டசபையில் கருணாநிதி பொன்விழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றும், நாளையும் சட்டசபையில் பிற அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டு தலைவர்கள் வாழ்த்திப் பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை சபை கூடியதும் ஆளுநர் பர்னாலா மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்திப் பேசும் நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் கருணாநிதி சபைக்குள் வந்தபோது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று வரவேற்றனர்.
பின்னர் சபாநாயகர் ஆவுடையப்பன் முதலில் பேசினார். பின்னர் நிதியமைச்சர் அன்பழகன் பேசினார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் தலைவர் கோவிந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் பேசினர்.
அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்து விட்டனர்.
நிகழ்ச்சியில், ஆளுநர் பர்னாலா பேசுகையில், தமிழக மக்களின் இதயங்களை வென்றவர் கலைஞர் கருணாநிதி. சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவிதைத் திறமை, அரசியல் ஞானம் கொண்ட கருணாநிதிக்கு வரலாற்றில் தனி இடம் உண்டு.
தமிழக மக்களின் அமுதமாக அவர் திகழ்கிறார். சட்டசபை உறுப்பினர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.
ஏழை, எளியவர்களின் நலனுக்காக இலவச கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வரலாற்று நாயகராக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.
பாராட்டுக்களுக்கு ஏற்புரையாற்றியபோது முதல்வர் கருணாநிதி தனது சட்டசபை வரலாற்றின் பல சுவாரஸ்ய அனுபவங்களை நினைவு கூர்ந்தார். சட்டசபைக்கு வருவற்கு முன்பு தான் எப்படிப் பேச வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக் கொண்டு வருவதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
பேரறிஞர் அண்ணா குறித்துப் பேசியபோது முதல்வரின் கண்கள் கலங்கின, நா தழுதழுத்தது.
தயாநிதி மாறன் புறக்கணிப்பு:
கருணாநிதியின் பொன் விழா பாராட்டு நிகழ்ச்சியில், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தி.க.தலைவர் கி.வீரமணி, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால் முதல்வரின் பேரனும், மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மட்டும் வரவில்லை. மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட கோபத்தில் அவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications