விவசாயிகள் மோதல்: ஒருவர் சுட்டுக் கொலை-இன்னொருவர் வெட்டிக்கொலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மோதலில் 2 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. அதே கிராமத்தைச் சேர்ந்த காட்டான் என்வருக்கும், குப்புசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்றும் இருவருக்கும் இடையே மோதல் மூண்டது. அந்த சமயத்தில் தன்னிடமிருந்த துப்பாக்கியால் காட்டானை சுட்டுள்ளார் குப்புசாமி. இதில் காட்டான் உயிரிழந்தார்.
தகவல் பரவியதும் காட்டானின் மகன்கள், உறவினர்கள் விரைந்து வந்தனர். குப்புசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளினர். இதில் குப்புசாமி அங்கேயே இறந்தார்.
இரு விவசாயிள் படுகொலை செய்யப்பட்டதால் சோழங்குப்பம் கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். குப்புசாமியை வெட்டிக் கொன்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications