சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
சென்னைசபாநாயகர் ஆவுடையப்பனுக்கு எதிராக சட்டசபையில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
இந்தத் தீர்மானத்தின் மீது விரிவான விவாதம் நடந்தது. அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பேசினர். அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன் அவையில் இல்லை. துணை சபாநாயகர் துரைசாமி தான் அவையை நடத்தினார்.
அப்போது குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆவுடையப்பனை அவைக்கு அழைத்தார் துணை சபாநாயகர். இதையடுத்து பலத்த கரவொலிக்கிடையே ஆவுடையப்பன் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்.
இதையடுத்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இருக்கையில் அமர்ந்த ஆவுடையப்பன், நான் நடுநிலையோடு தான் அவையை நடத்துகிறேன். எதிர்க் கட்சியினருக்கே அதிகம் பேச வாய்ப்பு தருகிறேன். அவையை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி நடத்துவேன். சுதந்திரமாக அவையை நடத்துவேன் என்றார்.












Click it and Unblock the Notifications